Tuesday 22 December 2009

தமிழ்த்தாய் வணக்கம்

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வான மளந்தனைத்தும் அளந்திடும்
வண் மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீச
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூல்கழி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம அறிந்தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே


No comments:

Post a Comment